Trending News

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான விசேட கற்கையினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி யினால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர்களின் குழுவினர் நேற்று முன்தினம்  (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதியிடம் அறிக்கையினை கையளித்தனர்.

இக் குழுவின் தலைவரான கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஒய்வுபெற்ற பொருளியில் துறை பேராசிரியர் தேசமான்ய டபிள்யு.டி.லக்ஷமன் அவர்களினால் அவ்வறிக்கை ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், அக்குழுவின் ஏனைய அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

 

 

 

 

Related posts

Gnanasara Thero released

Mohamed Dilsad

රාජ්‍ය සේවක වැටුප් වැඩි කිරීමට නොහැකිනම්, ඒ සඳහා වෙන් කළ මුදල්වලට සිදුවූ දේ රටට හෙළි කළ යුතුයි. – හිටපු ජනාධිපති රනිල් වික්‍රමසිංහ

Editor O

5000 ஓட்டங்களுடன் 09 வது இடத்தைப் பிடித்த மெத்திவ்ஸ்

Mohamed Dilsad

Leave a Comment