Trending News

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் அறுவர் கைது

(UTV|COLOMBO)-பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் ஆறு பேர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“சுரத்தல்” என அறியப்படும் சமீர பெரேரா ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் நேற்று ஹிம்புட்டான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர், பிணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அங்கொட லொக்காவின் மற்றுமொரு உதவியாளரான வெலி ரொஹா உள்ளிட்ட ஐந்து பேர் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து நேற்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்டவர்கள் நவகம்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் சிங்கள மொழி கற்க வேண்டும்

Mohamed Dilsad

நாளை முதல் பரீட்சைகளுக்கான சான்றிதழ்களை இணையம் மூலம் வழங்க நடவடிக்கை

Mohamed Dilsad

සෞඛ්‍ය ඇමති නලින්දගේ පෞද්ගලික ලේකම්, වෛද්‍යවරියකගේ ස්ථාන මාරුවකට අත දමයි

Editor O

Leave a Comment