Trending News

முதலாம் தரத்திற்கு 37 மாணவர்களை மாத்திரமே இணைத்து கொள்ள வேண்டும்

(UTV|COLOMBO)-பாடசாலைகளில் முதலாம் தரத்திற்காக 37 மாணவர்களை மாத்திரமே இணைத்து கொள்ள வேண்டும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சில பாடசாலைகளில் அரசியல் செல்வாக்கு மற்றும் பல்வேறுப்பட்ட காரணங்களால் இந்த நடைமுறையை பின்பற்ற முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 வருட கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட செயற்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

26 தொழிற்பயிற்சி பாடங்களை உள்ளடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்தாலோ அல்லது சித்தியடையாவிட்டாலோ தங்களுக்கான தொழிற்துறையை தேடிக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு மாணவர்களும் தங்களது திறமைகளை இனங் கண்டு கொள்ள வேண்டும்.

அந்த திறமையுடன் தொடர்புபட்ட தொழில் பயிற்சிகளை முன்னெடுக்கும் போது வாழ்கையை வெற்றி கொள்ள முடியும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

Putin offers condolences to Sri Lanka

Mohamed Dilsad

வசந்த சேனாநாயக்க அமைச்சரவை கூட்டத்தில்…

Mohamed Dilsad

தெமட்டகொட வெடிப்புச் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மூவர் பலி

Mohamed Dilsad

Leave a Comment