Trending News

பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரி எம்.ஆர்.லத்தீப் இன்றுடன் ஓய்வு

(UTV|COLOMBO) இலங்கை பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரியும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபருமான எம்.ஆர்.லத்தீப் இன்றுடன்(05) ஓய்வுப் பெறுகிறார்.

41 வருடமாக இத்துறையில் கடமையாற்றியுள்ள அவர், கடந்த இரண்டு வருடங்களாக பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரியாக கடமையாற்றி வந்தார்.

இவரது தலைமையின் கீழ் கடந்த 6 மாதங்களில் 798Kg ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அண்மையில் தெஹிவளை மற்றும் பேருவளைப் பகுதிகளில் கைப்பற்றப்பட்ட பாரிய தொகை ​ஹெரோய்ன் கைப்பற்றல் விடயமும் லத்தீப்பின் தமைமையின் கீழேயே முன்னெடுக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

Showery and cloudy condition expected over the island

Mohamed Dilsad

Assistance of Philippines Parliament for Sri Lanka

Mohamed Dilsad

“Government will support cultivation of the cane industry,” Minister Rishad Bathiudeen assures

Mohamed Dilsad

Leave a Comment