Trending News

காற்றுடன் கூடிய நிலைமை படிப்படியாக குறையும் சாத்தியம்

(UTV|COLOMBO) நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலைமை இன்று படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

 

 

 

 

Related posts

ஹரி பாட்டர் புத்தகங்களுக்கு தடை

Mohamed Dilsad

ஊவா மாகாண அரச வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பில்…

Mohamed Dilsad

Former US War Crimes Ambassador Says Attacks On Muslims A Reflection On Sri Lanka’s State Of Impunity

Mohamed Dilsad

Leave a Comment