Trending News

இயந்திர வாள்களை பதிவு செய்வதற்கான கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO) நாட்டில் பாவனையிலுள்ள சகல மரம் வெட்டும் இயந்திர வாள்களையும்  பதிவு செய்யும் நடவடிக்கைகளுக்கான காலவரையறை நீடிக்கப்பட்டுள்ளது

இதன்படி அரசு, அரை அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்படும் அனைத்து மரம் வெட்டும் இயந்திரங்களும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் மார்ச் மாதம் 15 ஆம் திகதி முன்னர் பதிவு செய்து அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நேற்றுடன்(28) பதிவு செய்யும் நடவடிக்கையை நிறைவு செய்ய இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

மட்டக்களப்பு ரயில் சேவை வழமை நிலைமைக்கு

Mohamed Dilsad

பலாலி விமான நிலைய புதுப்பித்தல் பணிகள் பிற்போடல்

Mohamed Dilsad

Hong Kong protests: Huge crowds rally peacefully

Mohamed Dilsad

Leave a Comment