Trending News

இன்று(21) காலை முதல் மின்சாரம் தடை

(UTV|COLOMBO) இன்று(21) காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை, யாழ். பிரதேசத்தில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக கட்டமைப்புகளில் பராமரிப்பு பணிகளுக்காக இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபையின் வட மாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, யாழ். பிரதேசத்தில் யாழ். காங்கேசன்துறை, காங்கேசன்துறை கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம், காங்கேசன்துறை வடக்கு கடற்படை முகாம், மயிலிட்டி, மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம், மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம் (புதியது), தையிட்டி, வறுத்தலைவிளான், வீமன்காமம், பலாலி, பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம், பலாலி இலங்கை விமானப்படை முகாம், பலாலி விமானப்படை ஓய்வுகால விடுதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

 

 

Related posts

තැබෑරුම් නව චක්‍රලේඛ අද සිට අහෝසි

Mohamed Dilsad

மஸ்கெலியாவிலிருந்து கதிர்காமத்திற்கு பக்தர்கள் பாத யாத்திரை

Mohamed Dilsad

No health risk in canned fish consumption

Mohamed Dilsad

Leave a Comment