Trending News

பாதுகாப்புச் சபைக்கு வரக்கூடாது என ஜனாதிபதி கூறியதாக அமைச்சின் செயலாளர் கூறினார்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியங்களை பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று(06) வழங்கினார்.

இதன்போது, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தன்னை கலந்து கொள்ளத் தேவையில்லை என, அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கபில வைத்தியரத்ன தனக்கு வாய்மூல அறிவித்தலை விடுத்ததாக  தெரிவித்திருந்தார்.

அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர , இடமாற்றம் தொடர்பான விவகாரம் ஒன்றுக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி அன்று பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அதன் பிறகு பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன தன்னிடம் தெரிவித்ததாகவும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அங்கு சாட்சியமளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் செவிசாய்க்குமாறு ரிஷாட், ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Mohamed Dilsad

UDHAYAM TV Launched: The Dawn Of A New Revolutionary Experience In The Media Field

Mohamed Dilsad

අතුරලියේ රතන හිමි ස්වාධීන වෙයි

Mohamed Dilsad

Leave a Comment