Trending News

காற்றுடன் கூடிய நிலைமை மேலும் தொடரும்

(UTV|COLOMBO) நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதன்படி மேல் , தென் , மத்திய , சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினம் இடைக்கிடையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்  வீசக்கூடும் என்பதால் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அந்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

 

 

 

Related posts

Two arrested with over 22kg of marijuana

Mohamed Dilsad

பாரிய நிதி மோசடி தொடர்பான விஷேட நீதிமன்ற விசாரணை ஆரம்பம்

Mohamed Dilsad

“Sri Lanka Cricket Elections on May 19” – SLC President

Mohamed Dilsad

Leave a Comment