Trending News

கராபிட்டியவில் புற்றுநோய் நிவாரண மையம்

(UTVNEWS | COLOMBO) – கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் நிவாரண மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது.

புற்றுநோய் சங்கம் மற்றும் பரோபகாரர்கள் நிதிபங்களிப்புடன் குறித்த நிவாரண மையம் கடற்படையினரால் நிர்மாணிக்கப்படுகின்றது.

அதன்படி, சுப நேரத்தில் மத சடங்குகளுடன் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்காக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபதிரன, தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போல், வைத்தியசாலைகளின் இயக்குனர் டொக்டர் ஜி. விஜேசூரிய, அரசு அதிகாரிகள், புற்றுநோய் சங்க உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறிய மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வது கட்டாயம்

Mohamed Dilsad

ஏசி, பிரிட்ஜ் உள்பட 19 பொருட்களின் மீதான வரி அதிகரிப்பு

Mohamed Dilsad

50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் சாத்தியம்…

Mohamed Dilsad

Leave a Comment