Trending News

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

(UTVNEWS|COLOMB0)- அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்கள் இன்று முதல் ஆரம்பமாகிறது.

இதேவேளை, உயர்தர பரீட்சையின் முதற்கட்ட திருத்தப்பணிகள் இடம்பெறும் 12 பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 16 ஆம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு நாலந்தா, பம்பலபிடிய இந்து கல்லூரி, ஞானோதயா, களுத்துறை ஞானோதய, இரத்தினபுரி மிஹிந்து வித்தியாலயம், குருநாகல் ஷாந்த ஆனா, கண்டி கிங்ஸ்வுட், கண்டி விகாரமகா தேவி மகளிர் பாடசாலை, கண்டி சீதாதேவி மகளிர் பாடசாலை, காலி வித்தியாலோக, பதுளை விகாரமகா தேவி மகளிர் பாடசாலை மற்றும் பதுளை ஊவா மகா வித்தியாலயம் ஆகியன இம்மாதம் 16 ஆம் திகதிவரை மூடப்படும் என கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

Maldives Ambassador to Sri Lanka decides to resign from post

Mohamed Dilsad

බණ්ඩාරවෙල නගරය අලංකාර කරන සිසු දරුවන්

Mohamed Dilsad

Istanbul rescuers search rubble for survivors after building collapse

Mohamed Dilsad

Leave a Comment