(UTV|COLOMBO) – தனியார் பேரூந்து, முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் அல்லது கட்சிகள் ஊக்குவிக்கப்படும் விதத்திலான வசனங்கள், சின்னங்கள், உருவப்படங்கள் உள்ளடக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஓட்டப்பட்டிருப்பின் அதனை உடனடியாக அகற்ற வேண்டியதன் அவசியத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு இன்று (29) ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.