(UTV|COLOMBO) – மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதான பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கை இராணுவத்தினர் 243 பேர் இன்று(13) அதிகாலை மாலி நாட்டிற்கு சென்றுள்ளனர்.
விஜயபாகு படை றெயிமென்ட், வைத்திய, பொறியியல் மற்றும் சேவைப் படையணிக்கு உட்பட்ட 20 அதிகாரிகளும், ஏனைய தரத்திற்கு உட்பட்ட 223 வீரர்களும் மாலியில் சமாதான பணியில் ஈடுபடவுள்ளனர்.
இவர்கள் இன்று காலை எதியோப்பிய விமான சேவைக்கு சொந்தமான போயிங் 767 – 300 என்ற விமானத்தில் அதிகாலை 3.20 இற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.