Trending News

மக்கள் ஆணையை ஏனையோரும் ஏற்று பதவி விலகுவார்கள்

(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தல் வெற்றியுடன் பாராளுமன்ற தேர்தலை நடாத்துவதே சிறந்தது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது பிறந்த நாளையொட்டி நாரஹேன்பிட ஶ்ரீ அஹயாராம விகாரையில் இடம்பெற்ற மத வழிப்பாட்டு நிகழ்வில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும், தற்போதும் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமே உள்ளதாக தெரிவித்த அவர் ஜனாதிபதி ஒரு கட்சியிலும், அரசாங்கம் வேறு ஒரு கட்சியிலும் இருந்து செயற்பட முடியாது என தெரிவித்தார்.

தற்போது அமைச்சரவையில் இருந்து சிலர் விலகியுள்ளதாக தெரிவித்த அவர், மக்கள் ஆணையை ஏனையோரும் ஏற்று பதவி விலகுவார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.

Related posts

பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை அதிகரிப்பு

Mohamed Dilsad

சுரக்ஷா காப்புறுதி தற்காலிகமாக நிறுத்தம்

Mohamed Dilsad

தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைகள் தொடர்பான மாநாடு கொழும்பில்

Mohamed Dilsad

Leave a Comment