Trending News

புதிய செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா

(UTVNEWS | COLOMBO) –  ‘ஜிலின்-2 காவோபென் 02பி’ என்ற புதிய செயற்கைகோளை சீனா விண்ணில் செலுத்தியது.

சீனாவின் சாங் குவாங் செயற்கைகோள் தொழில் நுட்ப நிறுவனம் இந்த செயற்கைகோளை தயாரித்துள்ளது.

இது உயர் தொலை உணர்வுத்திறன், அதிவேக தரவு பரிமாற்ற வசதி உள்ளிட்ட அதிநவீன தொழில் நுட்பங்களை கொண்டதாகும்.

குறித்த செயற்கைகோள் டையுவான் ஏவு மையத்தில் இருந்து நேற்று காலை 10.55 மணிக்கு சீனா விண்ணில் செலுத்தியது.

தற்போது இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக அதன் சுற்றுபாதையில் நிலை நிறுத்தப்பட்டு விட்டது.

இந்த செயற்கைகோள் விவசாயம், வன இயல், வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான தொலைநிலை உணர் திறன் தரவு மற்றும் சேவைகளை வழங்க உதவிகரமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்த அரசாங்கம் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டும் ஊடகங்கள் இந்த நாட்டுக்கு தேவை – ஜனாதிபதி [VIDEO]

Mohamed Dilsad

Disney To Outspend Netflix In 2019

Mohamed Dilsad

தெற்காசிய கனிஷ்ட மெய்வாண்மை விளையாட்டு விழா – போட்டியாளர்கள் இலங்கை விஜயம்

Mohamed Dilsad

Leave a Comment