Trending News

பிரதமர் மோடியின் உலங்கு வானூர்தி காரணமாக ஹட்டனில் 3 வீடுகள் கடும் சேதம்!

(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி காரணமாக ஹட்டன் பிரதேசத்தின் மூன்று வீடுகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

இதன் போது , காயமடைந்த பெண்ணொருவர் டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தியில் ஹட்டன் டன்பார் மைதானத்திற்கு மோடி வருகை தந்த நிலையில், உலங்கு வானூர்தி தரையிறங்கிய போது இவ்வாறு குறித்த வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதற்கு சிலதினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முதல் முன்னோட்ட பயிற்சியின் போதும் சிலவீடுகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

Illinois sues Trump Tower over Chicago River water use

Mohamed Dilsad

Visiting Malaysian PM calls on President = [PHOTOS]

Mohamed Dilsad

அமைச்சர் ரவுப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனத்திற்கு தீ வைப்பு

Mohamed Dilsad

Leave a Comment