Trending News

ஜெனிவா செல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடர், ஜெனீவாவில் நேற்றைய தினம் ஆரம்பமாகியது.

நேற்று ஆரம்பமான இந்த மாநாடு எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டின் போது இலங்கை தொடர்பில் இரண்டு தினங்களில் விசேட நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி, இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் பருவகால ஆய்வு அறிக்கையின் வெளிப்படுத்தல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்படவுள்ளது.

இந்த விவாதத்தின் அடிப்படையில், மனித உரிமைகள் பாதுகாப்புக்காக இலங்கையில் அமுலாக்கப்பட வேண்டிய பரிந்துரைகள் பேரவையினால் முன்வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இலங்கையின் மறுசீரமைப்பு, மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான தமது அறிக்கையை, எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதி மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் முன்வைக்கவுள்ளார்.

இந்த அறிக்கையில் இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்கனவே மறுசீரமைப்பு, பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமை பொறிமுறைகள் தொடர்பில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், குறித்த காலப்பகுதியில் காணப்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் அமுலாக்கப்பட வேண்டிய விடயங்கள், பரிந்துரைகள் என்பவை குறித்து சுட்டிக்காட்டப்படும்.

குறித்த சந்தர்ப்பங்களின் போது இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று ஜெனீவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாத முதல்வாரத்தில் இந்த குழு அங்கு செல்லவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Toyota to recall 2.9 million vehicles over faulty Takata airbags

Mohamed Dilsad

சீரற்ற வானிலையால் இரு விமானங்கள் மத்தளைக்கு

Mohamed Dilsad

கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பதற்கு முயற்சி செய்தேன் – மஹிந்த

Mohamed Dilsad

Leave a Comment