Trending News

அரநாயக்க நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை

(UTV|KEGALLE)-அரநாயக்க நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கைஅரநாயக்க சாமரகந்த நிலச்சரிவில் இடம்பெயர்ந்த 60 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ருவன்தெனிய பகுதியில் சீன நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளில் பாதிக்கப்பட்டோர் குடியமர்த்தப்படவுள்ளனர்.

எதிர்வரும் 22 ஆம் திகதி இதற்கான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் சந்திரசிறி பண்டார குறிப்பிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 1100 பேர் இடம்பெயர்ந்தனர்.

நிலச்சரிவில் சிக்கிய 28 சடலங்கள் மீட்கப்பட்டதுடன் சுமார் 100 பேர் காணாமற் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sri Lanka participates in the World Environment Day in New York

Mohamed Dilsad

Arjun Alosiyus and Kasun Palisena before Court today

Mohamed Dilsad

One dead in car accident

Mohamed Dilsad

Leave a Comment