Trending News

வெலிகட ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை ஆரம்பம்…

(UTV|COLOMBO)-வெலிக்கடை சிறைச்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் கைதிகளின் பிரச்சினையை விசாரிக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கூரையில் இருந்து இறங்கி அவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கைவிடும் பட்சத்தில் அவர்களுடன் கலந்துரையாட தயாராக இருப்பதாக, நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் மங்கலிகா அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்காக அமைச்சின் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

வெலிகட சிறைச்சாலையின் கூரையில் ஏறி பெண்கள் சிலர் நேற்று (13) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

බංග්ලාදේශයේ නව අග්‍රාමාත්‍ය ධුරයට පත් වූ මුහම්මද් යුනුස් ට ජනාධිති රනිල් වික්‍රමසිංහගෙන් සුබ පැතුම්…

Editor O

“கேரள மக்களுக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறோம்” – விராத் கோலி

Mohamed Dilsad

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து பரிந்துரை செய்ய குழு

Mohamed Dilsad

Leave a Comment