Trending News

சிறுத்தை குட்டிகளுக்கு தாயாக மாறிய பூனை?

(UTV|COLOMBO)-மஸ்கெலியாவில் தாயை பிரிந்த சிறுத்தை குட்டிகளுக்கு பூனை ஒன்று தாயாக மாறிய நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாமிமலை, கரவில தேயிலை தோட்டத்தில் தாயை பிரிந்த சிறுத்தை குட்டிகளை பூனை தந்தெடுத்துள்ளது.

சிறுத்தை குட்டிக்கு பூனையின் தாய் பாசம் கிடைத்துள்ளதாக நல்லதண்ணி வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

தேயிலை தோட்டத்தின் வாய்க்காலுக்குள் இந்த சிறுத்தை குட்டிகள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சிறுத்தை குட்டிகளை தோட்ட தொழிலாளர்கள் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

மூன்று வாரமுடைய சிறுத்தை குட்டிகளுக்கு பூனை பால் கொடுத்துள்ளது. பூனையின் மூன்று குட்டிகளையும் சேர்ந்து ஐந்து குட்டிகளாக பாசமாக வளர்த்து வருகிறது.

பூனையின் பாசமான செயற்பாடு குறித்து வனவிலங்கு அதிகாரிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Udayanga Weeratunge arrested in Dubai – Report

Mohamed Dilsad

Several spells of showers expected

Mohamed Dilsad

வௌ்ளை வேன் சம்பவம் – சந்தேகநபர்கள் விளக்கமறியலில் [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment