(UDHAYAM, COLOMBO) – களுத்துறை , கடுகுருந்த கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்து தொடர்பில் குறித்த படகினை செலுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் பின்னர் அவர் களுத்துறை நாகொடை மருத்துவமனையில சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 16 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.