Trending News

நாலக டி சில்வாவிடம் 09 மணிநேர விசாரணை…

(UTV|COLOMBO)-பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று(18) நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்றும்(19) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது

நேற்று(18) காலை 9.30-க்கு பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியதுடன் மாலை வரை அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சூழ்ச்சி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் அங்கு ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

புறக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு

Mohamed Dilsad

குப்பை பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு எச்சரிக்கை

Mohamed Dilsad

மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் அப்துல்லா

Mohamed Dilsad

Leave a Comment