Trending News

2,700 முறைப்பாடுகள்; 36 பேர் கைது…

(UTV|COLOMBO)-இந்த வருடத்தில் கடந்த காலப் பகுதியில், 2,700 முறைப்பாடுகள் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

அவற்றில் 1699 முறைப்பாடுகள் மேலதிக விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும், இலஞ்ச சட்டத்திற்கு முரணான மற்றும் போதுமான தகவல்கள் இல்லாத 772 முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என்று அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

ஊழல் சம்பந்தமாக 1169 முறைப்பாடுகளும் இலஞ்சம் சம்பந்தமாக 388 முறைப்பாடுகளும் முறையற்ற விதத்தில் சொத்து சேகரித்தல் சம்பந்தமாக 83 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆணைக்குழு இந்த வருடத்தில் கடந்த காலப் பகுதியில், நாடு முழுவது நடத்திய சுற்றிவளைப்புக்களில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 34 பேர் அரச அதிகாரிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழையினால் 44 பேர் பலி

Mohamed Dilsad

Indian train units and coaches to be imported

Mohamed Dilsad

Special Police team to assist Presidential Commission to probe SriLankan, Mihin Airlines

Mohamed Dilsad

Leave a Comment