Trending News

அமித் வீரசிங்க உள்ளிட்ட மூன்று பேரின் உத்தரவு செயற்படுத்தப்பட்டது

(UTV|COLOMBO)-மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட மூன்று பேருக்கு கண்டி மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு இன்று தெல்தெனிய நீதவான் சானக கலன்சூரியவால் செயற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி , ஒருவருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணைகளிலும் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் , ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறும் சந்தேகநபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்டிருந்த மோசன் மனுவொன்றை ஆராய்ந்ததன் பின்னர் , கண்டி மேல்நீதிமன்றம் கடந்த தினம் இவர்களுக்கு பிணை வழங்கியிருந்தது.

குறித்த சந்தேகநபர்கள் கண்டி குழப்பநிலை தொடர்பில் கைது செய்யப்பட்டு கடந்த 7 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

China denies Muslim separation campaign in Xinjiang

Mohamed Dilsad

“கண்டிக்கு அடுத்த கண்கலங்கல்” கரையேற்றப் போவது யார்?

Mohamed Dilsad

මාර්ගෝපදේශ නොතකා මගීන් ප්‍රවාහනය කරන ධීවර යාත්‍රාවල බලපත්‍ර තහනම්

Mohamed Dilsad

Leave a Comment