Trending News

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ பவன் இன்று ஓய்வுபெறவுள்ளார்

(UDHAYAM, COLOMBO) – பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ பவன் இன்று ஓய்வுபெறவுள்ளார்.

இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசராக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி முதல் கடமையாற்றிய நிலையிலேயே கே. ஸ்ரீபவன் இன்று ஓய்வுபெறுகிறார்.

இதேவேளை புதிய பிரதம நீதியரசர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் அரசியலமைப்பு பேரவை அதன்  தலைவரான சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நேற்றிரிவு கூடியது.

இதன் போது புதிய நீதியரசர் நியமனத்திற்கு  நீதியரசர் பிரியசாத் டெப்பை சிபார்சு செய்துள்ளது.  அரசியலமைப்பு பேரவையின் இந்த சிபார்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

Germany, Sri Lanka discusses matters on civil-military coordination in Jaffna

Mohamed Dilsad

Armed robber stole Rs. 1.7 million in Chavakachcheri,

Mohamed Dilsad

வெனிசுலா எண்ணெய் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

Mohamed Dilsad

Leave a Comment