Trending News

வேதன அதிகரிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று(26)

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று(26) இடம்பெறவுள்ளது.

நிதி அமைச்சு, முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழில் அமைச்சு ஆகிய மூன்று தரப்பினருக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கடந்த ஒக்டோபர் மாதம் நிறைவுக்கு வந்தது.

இந்நிலையில், அதற்கு முன்னதாகவே தொழிற்சங்கள் தங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருந்தன.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளொன்றுக்கான அடிப்படை வேதனம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

Parliament adjourned until tomorrow

Mohamed Dilsad

நஞ்சூட்டப்பட்டமையே ஏழு யானைகள் உயிரிழக்க காரணம்

Mohamed Dilsad

அவுஸ்திரேலியப் பிரதமராக மீண்டும் ஸ்கொட் மோரிசன் பதவியேற்பு

Mohamed Dilsad

Leave a Comment