Trending News

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இளைஞர்கள் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமாக 3 துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் அம்பலாங்கொட – வதுகெதர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் காலி மற்றும் மொரந்துட்டுவ பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

நேற்று கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கிகளுடன் பல்வேறு வகையான 5 இரவைகளும், மோட்டார் வாகனம் ஒன்றும், உந்துருளியொன்றும் காவல்துறையால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

21 வயதான இரண்டு சந்தேக நபர்களும் அம்பலாங்கொட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

Grace period to handover illegally held swords concludes today

Mohamed Dilsad

ඥාණසාර හිමියන් වැලිකඩ බන්ධනාගාරයට රැගෙන යයි

Mohamed Dilsad

உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 42க்கும் அதிகமானோர் படுகாயம்

Mohamed Dilsad

Leave a Comment