Trending News

பொலன்னறுவையில் எலிக்காய்ச்சலால் 10 பேர் உயிரிழப்பு

(UTV|POLANNARUWA)-பொலன்னறுவை பகுதியில், எலிக் காய்ச்சலினால் கடந்த 3 வாரங்களுக்குள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேநேரம், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள், எலிக் காய்ச்சலினால் 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக
சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்கள், உரிய வகையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளாமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலன்னறுவை சுகாதார சே​வை பணிப்பாளர், டொக்டர் சரத் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், எலிக்காய்ச்சல் தொடர்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் டொக்டர் சரத் ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

மும்பையில் உள்ள வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 ​பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

மின்னல் தாக்கி ஐவர் காயம்

Mohamed Dilsad

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்திற்கு பூட்டு

Mohamed Dilsad

Leave a Comment