Trending News

பாடசாலை விடுமுறை காலத்தை முன்னிட்டு புகையிரத சேவை…

(UTV|COLOMBO)-பாடசாலை விடுமுறை காலத்தில் மாணவர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் மலையக பகுதிகளுக்கு சுற்றுலா செல்லக் கூடும் என்ற நோக்கில் விஷேட புகையிரத சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை காலத்தை முன்னிட்டு மலைநாட்டுக்கான புகையிரத மார்க்கத்தில் விஷேட புகையிரதம் ஒன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக
புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளாந்தம் காலை 7.30 அளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை வரை பயணிக்கவுள்ளது.

மறுநாள் முற்பகல் 9.30 அளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளதாக கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

Sri Lanka Tour of Pakistan to go ahead as planned – SLC

Mohamed Dilsad

காற்றுடன் கூடிய காலநிலையில் அதிகரிப்பு

Mohamed Dilsad

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை உயர்வு

Mohamed Dilsad

Leave a Comment