Trending News

சிங்கப்பூர்-இலங்கை சுதந்திர உடன்படிக்கை குறித்த அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிப்பு

(UTV|COLOMBO)-இலங்கை – சிங்கபூர் சுதந்திர உடன்படிக்கை உரிய அனுமதியைப் பெற்று மேற்கொள்ளப்படவில்லை என்று தெரியவந்துள்ளதாக, அதுதொடர்பில் ஆய்வு செய்த நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சுதந்திர உடன்படிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு நேற்று  தமது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது.

இந்த குழுவின் தலைவரான கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் டபிள்யு. லக்மஸ்மன் குறித்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இதில் குறித்த உடன்படிக்கை தொடர்பில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடம் உரிய அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

අලුත් විදේශ ගමන් බලපත්‍ර හඳුන්වා දෙයි

Editor O

‘இந்தியன்-2’ படத்தில் புரட்சிப் பெண்ணாக நடிக்கும் நயன்தாரா?

Mohamed Dilsad

Navy apprehend 30 persons for engaging in illegal acts

Mohamed Dilsad

Leave a Comment