Trending News

பல்வேறு பகுதிகளில் ஹெரோயினுடன் மூவர் கைது

(UTV|COLOMBO)-நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத போதை பொருள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கல்கிஸ்ஸ கல்தேமுல்லை பகுதியில் 20 கிராம் ஹெரோயினுடன் 41 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்மீமன கெசல்கஸ்ஹேன பகுதியில் 10 கிராம் ஹெரோயினுடன் 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குருநாகல் – வீதியவத்தை பகுதியில் 3 கிராம் ஹெரோயினுடன் 23 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

இந்திய பிரதமர் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கிடையில் சந்திப்பு

Mohamed Dilsad

Easter Blasts in Sri Lanka: INTERPOL deploys team to Sri Lanka

Mohamed Dilsad

சன்னி லியோன் படத்துக்கு எதிர்ப்பு

Mohamed Dilsad

Leave a Comment