Trending News

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன பிணையில் விடுதலை

(UTV|COLOMB)–பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று இருவரையும் விடுவிப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரும் 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளுபிட்டிய, மல்பாரவில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் வைத்தே இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர்.

 

 

 

 

 

Related posts

38 பேருடன் சென்ற சிலி நாட்டு விமானம் மாயம்

Mohamed Dilsad

ஐக்கிய தேசிய முன்னணினர் மற்றுமொரு கலைந்துரையாடல் இன்று

Mohamed Dilsad

பங்களாதேஷிற்கு எதிரான தொடரை தன்வசப்படுத்தியது இலங்கை

Mohamed Dilsad

Leave a Comment