Trending News

சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் பதிவு செய்ய தீர்மானம்

(UTV|COLOMBO)-பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் பதிவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்நேய மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவையாக இவை முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் நேரடி கண்காணிப்புக்களை மேற்கொள்வதற்காகவே இந்தத் திட்டத்தின் நோக்கம் என, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சேவையாற்றுபவர்களின் கல்வி தகைமை மற்றும் மனநிலை தொடர்பிலும் மதிப்பீடு செய்யப்படவுள்ளது.

சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சிறுவர்கள் பல்வேறு வன்முறைகள் மற்றும் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு உள்ளாகுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிவித்த முக்கிய அறிவித்தல்

Mohamed Dilsad

ශිෂ්‍යත්ව විභාගයේ පිටවූ ප්‍රශ්න ගැන විභාග දෙපාර්තමේන්තුව ගත් තීරණය මෙන්න

Editor O

Housing program to get international assistance

Mohamed Dilsad

Leave a Comment