Trending News

சுற்றுலாப் பயணிகளுக்கு இணையத்தளமூலம் ஈ-நுழைவாயில் அனுமதி சீட்டு

(UTV|COLOMBO)-இலங்கையில் உள்ள தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக இணையத்தளமூலமான ஈ-நுழைவாயில் அனுமதிக்கான சீட்டை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, அஜித் பி பெரேரா ஆகியோர் தலைமையில் இன்று 11.00 மணிக்கு இலங்கை சுற்றுலா மற்றும் முகாமைத்துவ நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

ஈ-நுழைவாயில் திட்டத்தின் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலகுவாக தேசிய பூங்காவை பார்ப்பதற்கான வசதி கிட்டும். முதல் முறையாக வில்பத்து தேசிய பூங்காவுக்காக இந்த பிரவேச ரிக்கெட் நடைமுறை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

ரணவிரு சேவா அதிகார சபையின் நடமாடும் வைத்திய முகாம்

Mohamed Dilsad

Two Australians killed, two others injured by an accident at Southern Expressway

Mohamed Dilsad

ප්‍රජාතන්ත්‍රවාදී ජාතික සන්ධානය වන්නියට ඉදිරිපත් කළ නාමයෝජනාව ප්‍රතික්ෂේප කිරීමට එරෙහිව ශ්‍රේෂ්ඨාධිකරණයට පෙත්සමක්

Editor O

Leave a Comment