Trending News

இருவேறு பகுதிகளில் இருந்து பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது

(UTV|COLOMBO)-நாட்டின் இருவேறு பகுதிகளில் இருந்து ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரள்ளை மற்றும் தலவத்துகொட பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரள்ளை புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்து 5 கிராம் 773 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

38 வயதுடைய பொரள்ளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை மிரிஹான விஷேட குற்றத்த தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 1 கிலோ 518 கிராம் ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பன்னிபிட்டிய, கஹவத்த மற்றும் தலவதுகொட பகுதிகளை சேர்ந்த 23 இற்கும் 40 வயதிற்கும் உட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

இனிப்புச் சுவை ஊட்டப்பட்ட மென்பானங்களினால் புற்றுநோய்கள் அதிகரிப்பு

Mohamed Dilsad

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் 10 மனுக்கள்

Mohamed Dilsad

Balakot air strike: Pakistan shows off disputed site on eve of India election

Mohamed Dilsad

Leave a Comment