Trending News

பகிடிவதை செய்த 14 பல்கலை மாணவர்களும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-பகிடிவதைக்கு எதிராக செயற்பட்ட இரண்டு மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வடமேல் பல்கலைகழகத்தின் 14 சிரேஷ்ட மாணவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 14 பேரும் நேற்றைய தினம் குளியாபிட்டி நீதவான் ஜனனி எஸ்.விஜேதுங்க முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

Ward Place Towards Borella Blocked Due To Protest

Mohamed Dilsad

Oscars move to honor ‘popular’ movies sparks swift backlash

Mohamed Dilsad

Met. Dept. forecasts fair weather over most parts of Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment