Trending News

பாண்டியா மற்றும் ராகுல் மீதான போட்டித் தடை நீக்கம்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ (BCCI) தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரர் கேஎல் ராகுல், வேகப்பந்து வீச்சு சகலதுறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா இருவரும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக பிசிசிஐ அவர்களை இடைநீக்கம் செய்தது. இதனால் இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக இந்தியா திரும்பினார்கள்.

இதனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

இலங்கையின் புதிய வரைபடம் எப்படி ..! (படம் இணைப்பு)

Mohamed Dilsad

பாகிஸ்தானின் மிகப்பெரிய சர்வதேச விமானநிலையம்

Mohamed Dilsad

NEDA PIONEERS UNESCO MILESTONE IN SOUTH ASIA

Mohamed Dilsad

Leave a Comment