Trending News

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்க ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட பெயர் நிராகரிப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்குமாறு, பரிந்துரைக்கப்பட்டவரின் பெயர், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய அரசமைப்பு சபையினால் இரண்டாவது தடவையாகவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக நியமிக்குமாறு, ஜனாதிபதியால் இதற்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்ட பெயர், குறித்த சந்தர்ப்பத்திலேயே நிராகரிக்கப்பட்டது. எனினும். இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அதே பெயரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அர​சமைப்பு ​சபைக்கு அனுப்பி வைத்துள்ளாரென அறிய முடிகின்றது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான தலைவர் வெற்றிடம் தொடர்பில், அரசமைப்பு சபை நீண்ட நேரம் கலந்தாலோசித்தது. அதன் பின்னரே, ஜனாதிபதியினால் அனுப்பிவைக்கப்பட்ட பெயரை குறித்த சபை நிராகரித்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

Update – சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கிப் பிரயோகம்:சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற வேன் கண்டுபிடிப்பு

Mohamed Dilsad

Thirty-two suspects including Amith Weerasinghe further remanded

Mohamed Dilsad

எதிர்வரும் 11 ஆம் திகதி இஸ்ரேல் பிரதமர், இந்தியா விஜயம்

Mohamed Dilsad

Leave a Comment