Trending News

ஹோட்டல் மீது மண் சரிந்த விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

பெருநாட்டில் ஹோட்டலின் மீது மண் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பெருவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அப்ரிமாக் பிராந்தியத்தின் அன்டியன் நகரில் மலை அடிவாரத்தில் உள்ள ஹோட்டலில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, எதிர்பாரத விதமாக அந்த பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டு ஹோட்டலின் மீது மண் சரிந்து விழுந்ததில் அதன் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து, அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும் 15 பேரை உயிரிழந்துள்ளதுடன், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 29 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

Secretary of National Police Commission removed

Mohamed Dilsad

International support needed to achieve goals – President

Mohamed Dilsad

இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை

Mohamed Dilsad

Leave a Comment