Trending News

சேனா படைப்புழு தாக்கம் – 307 விவசாயிகளுக்கு நட்ட ஈடு

(UTV|COLOMBO) சேனா படைப்புழு தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் முதல்கட்ட வேலைத்திட்டம் நாளை(10) அம்பாறையில் ஆரம்பமாகவுள்ளது.

முழுமையாக பாதிக்கப்பட்ட 307 விவசாயிகளுகளுக்கு இதன்போது நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, பாதிப்புக்குள்ளான ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா வீதம் நட்டஈடு வழங்கப்படவுள்ளதுடன் இதற்காக 16 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முதற்கட்டமாக அம்பாறை, அனுராதபுரம், மொனராகலை மாவட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விவசாய காப்பறுதி சபை, விவசாய திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து இதனை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நடிகை அனுபமா கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிக்கிறாரா?

Mohamed Dilsad

Government to ban tobacco cultivation from 2020

Mohamed Dilsad

IOC accused of “cowardice” over doping

Mohamed Dilsad

Leave a Comment