Trending News

மஹிந்த உட்பட முன்னாள் அமைச்சரவைக்கு எதிரான மனு வாபஸ்…

(UTV|COLOMBO) மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு சம்பந்தமான மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெறப்பட்டுள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜுன ஒபெசெகர முன்னிலையில் இன்று(12) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில்,
ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் ​தேசிய கூட்டமைப்பு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக ஆஜராகியிருந்த சட்டத்தரணி குறித்த மனுவை வாபஸ் பெறுவதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

பிரதமரின் பொசொன் நோன்மதி தின செய்தி

Mohamed Dilsad

SLNS ‘Sagara’ and ‘Nandimithra’ arrive at Changi Harbour in Singapore

Mohamed Dilsad

சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கிய அறிக்கை

Mohamed Dilsad

Leave a Comment