Trending News

கொழும்பில் 24 மணி நேர நீர் வெட்டு…

(UTV|COLOMBO) கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

இன்று (30) காலை 09.00 மணிமுதல் நாளை காலை 09.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

மின்சார சபையின் திடீர் மின்வெட்டு மற்றும் அத்தியாவசிய திருத்தப் பணிகளுக்காக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

இதற்கமைய, கொழும்பு, கோட்டை, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கடுவல மாநகர சபை பிரதேசம், பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபை பிரதேசம், கொட்டிகாவத்தை, முல்லேரியாவ பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசம், றத்மலானை, சொய்ஸாபுர ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

 

 

 

Related posts

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

Mohamed Dilsad

ஐக்கிய தேசிய கட்சியின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு

Mohamed Dilsad

அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர்களாக இரண்டு அமைச்சர்கள் நியமனம்

Mohamed Dilsad

Leave a Comment