Trending News

தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம் நாளை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

(UTV|COLOMBO) தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நாளை முற்பல் இடம்பெறவுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச அதனை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளார்.

புதுவருட காலத்தில் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் மற்றும் தனியார் வர்த்தக நிலையங்கள் தற்போது தயாராகியுள்ளன.

மேலும் புதுவருடத்திற்காக ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக விசேட பஸ் மற்றும் புகையிரத சேவைகள் எதிர்வரும் 8ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும்.

புதுவருடத்தில் பிரதான பாதையிலும், களனிவெலி புகையிரத பாதையிலும் மேலதிக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என புகையிரத பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

හිටපු ජනාධිපති මෛත්‍රීපාල ඇතුළු තිදෙනෙකුට එරෙහි වාරණ නියෝග ඔක්තෝබර් 09 දක්වා දීර්ඝ කෙරේ

Editor O

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரின் மேன்முறையீட்டு மனு மீளப்பெறப்பட்டது

Mohamed Dilsad

MSD firearm reported missing

Mohamed Dilsad

Leave a Comment