Trending News

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தம் வசமாக்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ்

(UTV|INDIA) ஐ.பி.எல் தொடரில் நேற்று இடம்பெற்ற 14வது போட்டியில் ரோயல் செலஞ்ஜர்ஸ் பெங்களுர் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் ரோயல் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்ஜர்ஸ் பெங்களுர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய, ராஜஸ்தான் ரோயல் அணி 19.5 ஓவர்கள் நிறைவில், 3 விக்கட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது.

அந்த அணி சார்பாக ஜோஸ் பட்லர் 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

இதற்கமைய , ரோயல் செலஞ்ஜர்ஸ் பெங்களுர் அணி பங்குபற்றியுள்ள நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதியின் கருத்திட்ட பணிப்பாளர் பதவியிலிருந்து பிரபா கணேசன் இராஜினாமா

Mohamed Dilsad

கனமழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை

Mohamed Dilsad

தலதா மாளிகைக்கு விஜயம் செய்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Mohamed Dilsad

Leave a Comment