Trending News

தேசிய இரத்த வங்கிக்கான உபகரணக் கொள்வனவில் முறைகேடு – ஜனாதிபதி ஆணைக்குழு

(UTV|COLOMBO) தேசிய இரத்த வங்கிக்கு உபகரணங்களைக் கொள்வனவு செய்வதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுப்பதாக, அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி முதற்கட்ட விசாரணைகளுக்காக, இரத்த வங்கியின் பொறியியலாளர் சுதீர சத்துரங்க ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜேர்மன் மற்றும் நெதர்லாந்திலிருந்து, 283 இரத்த வங்கிகளுக்கான குளிர்சாதனப் பெட்டிகளைக் கொள்வனவு செய்தமை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தநிலையில், இந்த விடயம் தொடர்பில் அங்கு கடமையாற்றிய பதில் பணிப்பாளர், டொக்டர் ருக்ஸான் பெல்லனவுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

நெய்மர் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா?

Mohamed Dilsad

Robert Mugabe: African leaders gather in Zimbabwe for state funeral

Mohamed Dilsad

ලොහාන් සහ බිරිඳ දෙසැම්බර් 06 දක්වා යළි රිමාන්ඩ්

Editor O

Leave a Comment