Trending News

நாளை முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு

(UTV|COLOMBO) அனைத்து அலுவலக புகையிரத சேவைகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இரவு தபால் புகையிரத சேவை நேற்று இடம்பெறவில்லை. பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்ததே இதற்குக் காரணமாகும். ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் இரவு தபால் புகையிரத சேவை மேற்கொள்ளக்கூடியதாக இருக்குமென்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இருப்பினும், காலையில் இடம்பெறும் அனைத்து தூர இடங்களுக்கான புகையிரத சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

Mahinda Rajapakse summoned before the PRECIFAC

Mohamed Dilsad

Lotus Road closed temporarily

Mohamed Dilsad

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோர் – தகவல்களை வழங்குங்கள்

Mohamed Dilsad

Leave a Comment