Trending News

இன்றைய தினம் இரண்டாவது இடைக்கால அறிக்கை சட்டமா அதிபரிடம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் கண்டறிவதற்காக, நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பில், தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியவர்களைக் கண்டறிவதற்காக உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவில் முதலாவது அறிக்கை அண்மையில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,தற்போது இரண்டாவது அறிக்கை நேற்றைய தினம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,இரண்டாவது இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கமைவாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்த அறிக்கை இன்றைய தினம் சட்டமா அதிபரிடம் பொறுப்பளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Related posts

Magnitude 7.8 quake hits off Russia’s Kamchatka

Mohamed Dilsad

ஜனாதிபதி வேட்பாளர்கள் கொள்கைப் பிரகடனங்களை ப்ரெயில் முறையிலும் வெளியிட வேண்டும்

Mohamed Dilsad

உக்ரைன் நாட்டில் பாரிய வெடிப்பு சம்பவம் ; 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

Mohamed Dilsad

Leave a Comment