Trending News

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

(UTV|COLOMBO) சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 20 இலங்கையர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் குறித்த நபர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்ல முற்பட்ட போது அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 05 ஆண்டுகளில் அவுஸ்திரேலியா நோக்கி சென்ற முதலாவது இலங்கையர்கள் குழு இதுவென்பதுடன், 2013ம் ஆண்டு முதல் அகதிகளாக அவுஸ்திரேலியா சென்ற 186 பேர் இதுவரை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

An epoch meeting between Dr. Mahathir and President Sirisena

Mohamed Dilsad

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

Mohamed Dilsad

කටාර් ජාතිකයින්ට සංචාරක තහනමක්

Mohamed Dilsad

Leave a Comment