Trending News

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 32 பேருக்கும் விடுதலை

(UTV|COLOMBO) இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 32 பேரை விடுப்பதற்கு இந்திய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

நேற்றையதினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில், குறித்த 32 இலங்கை மீனவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.