Trending News

இரண்டு பேர் கைது…

(UTV|COLOMBO)   உணவட்டுன பிரதேசத்தில் வசிக்கின்ற பெண் ஒருவரை கொலை செய்வதற்காக 20 லட்சம் ரூபாவிற்கு ஒப்பந்தம் செய்துக் கொண்டிருந்த மற்றுமொரு பெண்ணும், அவருக்கு துணையாக இருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டப் பெண் ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் உள்ளுராட்சி சபை ஒன்றின் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி அவர்கள் கொலை செய்யப்படவிருந்த பெண்ணின் கணவரே இந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்படி குறித்தப் பெண்ணின் ஒப்பந்தம் வழங்கிய கணவர், வெளிநாடொன்றில் தொழில்புரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இலங்கை முதலாவது வௌ்ளப் பதக்கத்தை வென்றது

Mohamed Dilsad

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்-வங்கி கணக்குகள் இடைநிறுத்தம்

Mohamed Dilsad

More graduates for public service

Mohamed Dilsad

Leave a Comment